சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

Trincomalee Sri Lankan Peoples Eastern Province
By H. A. Roshan May 29, 2025 10:30 AM GMT
H. A. Roshan

H. A. Roshan

திருகோணமலையில் (Trincomalee) சிறுவர் பாதுகாப்பு தொடர்பான மாணவத் தூதுவர் தேசிய வேலைத்திட்டம் குறித்து அதிபர்களுக்கான செயலமர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது நேற்று (28) மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் பங்குபற்றலுடன் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

அத்தோடு, இந்த நிகழ்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தலைமையில் முன்னெடுக்கபட்டுள்ளது.

மட்டக்களப்பில் வீதியில் மீட்கப்பட்ட சடலம்

மட்டக்களப்பில் வீதியில் மீட்கப்பட்ட சடலம்

விழிப்புணர்வு 

திருகோணமலை பொது வைத்தியசாலையின் உள வைத்திய நிபுணர் பி.டிமிது மகேந்திரா மற்றும் மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் மு.மு.மு.ஸம்ஸீத் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம் | National Child Protection Program Srilanka

இதன்போது அதிபர்களினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தக்க பதிலும் போதியளவிலான விளக்கங்களும் வழங்கப்பட்டன.

மேலும், இந்நிகழ்வில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட மற்றும் பிரதேச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.   

மட்டக்களப்பில் பறிபோன உயிர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

மட்டக்களப்பில் பறிபோன உயிர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

சாய்ந்தமருது சுகாதார அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட செயற்றிட்டம்

சாய்ந்தமருது சுகாதார அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட செயற்றிட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW   


GalleryGalleryGalleryGallery