சமூக நல்லிணக்கத்திற்காக மூதூரில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கை
மூதூர் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட அனைத்து பிரதேசங்களையும், சமூகங்களையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட 'மூதூர் சிவில் ஒன்றியத்தின்' ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று (16) மூதூர் - பேர்ல் கிரான்ட் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
சிறப்பு நடவடிக்கை
இந்நிகழ்வில் மூதூர் சிவில் ஒன்றியம் தொடர்பாக கலந்து கொண்டோருக்கு குறுகிய அறிமுகம் வழங்கப்பட்டதோடு, இந்நிகழ்வின் முக்கியத்துவம் தொடர்பில் சர்வமதத் தலைவர்களின் உரையும் இடம்பெற்றுள்ளது.
மேலும், இந்நிகழ்வில், சர்வமதத் தலைவர்கள், திணைக்கள அதிகாரிகள்,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள், மகளிர் சங்கங்களின் பிரதிநிதிகள், விளையாட்டு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மூதூர் சிவில் ஒன்றிய உறுப்பினர்கள் உள்ளிட்ட 140 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |














