தோப்பூர் பிரதேசத்தில் குரங்குகளின் தொல்லை அதிகரிப்பு!
Trincomalee
Sri Lankan Peoples
Eastern Province
By Rakshana MA
திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் (Thoppur) பிரதேசத்தில் குரங்குகளின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது.
குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து உணவுகளை உட்கொள்வதோடு வீட்டு உபகரணங்களுக்கும் சேதம் விளைவித்து வருகின்றன.
அத்தோடு வீட்டு காணிகளில் உள்ள பயன்தரும் மரங்களில் காணப்படும் பூக்கள், பழங்கள் உள்ளிட்டவைகளை சாப்பிடுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அச்சத்தில் மக்கள்
அதேவேளை, வீடுகளில் சிறு பிள்ளைகளை வைத்திருப்பது கூட அச்சமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென தோப்பூர் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






