பட்டிருப்பு பாலத்தின் கீழிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Batticaloa
By Madheeha_Naz Apr 20, 2024 11:56 PM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் நேற்று முன்தினம் காணாமல்போன மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவு பகுதியை சேர்ந்த மாணவனே பட்டிருப்பு பாலதிற்கு கீழான ஆற்றுப்பகுதியிலிருந்து நேற்று  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் வீட்டிலிருந்து களுவாஞ்சிகுடிக்கு தனியார் வகுப்புக்கு செல்வதாக கூறிச்சென்றவர் நேற்று மாலை வரையில் வீடு திரும்பாத நிலையில் பட்டிருப்பு பாலத்திற்கு அருகில் அவர் சென்ற துவிச்சக்கர வண்டியும் அவர் அணிந்துசென்ற காலணியும் கிடப்பதை அறிந்த குடும்பத்தினர் இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளனர்.

மேலதிக விசாரணை

இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் இன்று பகல் குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பட்டிருப்பு பாலத்தின் கீழிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு | Missing Student Body Recovered

களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் கட்டளைக்கு அமைவாக குறித்த பகுதிக்கு வந்த திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர்.மகேந்திரன் சடலத்தினை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைகளுக்கான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

GalleryGalleryGalleryGallery