கல்முனையில் கல்வியலாளர்களுக்கு மகுடம் சூட்டும் நிகழ்வு முன்னெடுப்பு
அல் - மீஸான் பௌண்டேஷனின் ஏற்பாட்டில், கல்வியலார்களை கௌரவிக்கும் வகையில் "மரகதங்கள் சீசன் த்ரி" எனும் சிறப்பு நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது, கல்முனை அல்-அஸ்ஹர் அரங்கில் நேற்று(22) மாலை இடம்பெற்றது.
இந்த நிகழ்வு, அல்-மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளரும், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவை பணிப்பாளருமான நூருல் ஹுதா உமரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
மகுடம் சூட்டும் நிகழ்வு
இலங்கை கல்வியியலாளர் சேவைக்கு தேர்வாகியவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்கள், மற்றும் பிபா சர்வதேச நடுவராக நியமிக்கப்பட்ட ஏ.எம்.ஜப்ரான் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
அதேவேளை இந்த நிகழ்வில், கல்முனை கல்வி வலய பிரதிக் கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
நட்சத்திர அதிதியாக, மாற்றத்துக்கான சர்வதேச பங்காளிகள் நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்த்திட்ட ஆலோசகரும், அல்-மீஸான் பௌண்டேஷன் ஆளுநர் சபை உறுப்பினருமான இப்திகார் றிசாத் செரீப் அத்துடன், பி.ஜிஹானா ஆலீப், எம்.என்.ஏ.மலிக், எம்.எல்.எம்.முத்தரிஸ், யூ.எல்.சாஜித், யூ.எல்.றியால், அஸ்மா அப்துல் மலிக், ஏ. சஞ்சீவன் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.
விசேட அதிதிகளாக, சமாதான கற்கைகள் நிலைய பணிப்பாளர் பேராசிரியர் எஸ்.எல். றியாஸ், பொறியியலாளர் கமால் நிஷாத், கல்வி ஆலோசகர்கள், அதிபர்கள், உதவி அதிபர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், மற்றும் அல்-மீஸான் பௌண்டேஷனின் ஆளுநர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மேலும் இந்த நிகழ்வு, கல்வியுறுப்பினர்களின் சேவையை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு, கல்முனை பகுதியின் கல்வி சமூகத்துக்கே பெருமை சேர்த்ததாகக் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |














