சம்பூரில் யானை தாக்கி முதியவர் பலி

Eastern Province Death Sri Lanka Elephants
By Rukshy May 30, 2025 09:40 AM GMT
Rukshy

Rukshy

சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள கணேசபுரம் பகுதியிலுள்ள கணேசபுரம் பிரதான வீதியில் வைத்து யானை தாக்குதலுக்கு உள்ளாகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று (30) காலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மூதூர் -கட்டைபறிச்சான் பகுதியைச் சேர்ந்த சிவக்கொழுந்து இராசரெத்தினம் (வயது 75) என சம்பூர் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஏறாவூரில் பழங்களைத் திருடிய நபர் கைது

ஏறாவூரில் பழங்களைத் திருடிய நபர் கைது

மேலதிக விசாரணை

உயிரிழந்த நபர் , தனது வயலுக்கு குருவிக் காவலுக்குச் சென்றபோது கணேசபுரம் வீதியில் யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பூரில் யானை தாக்கி முதியவர் பலி | Man Killed By Elephant Attack

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் அறிவிப்பு!

மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் அறிவிப்பு!

தம்பலகாமத்தில் சிறு தொழில் முயற்சி பிரிவின் விற்பனை கண்காட்சி

தம்பலகாமத்தில் சிறு தொழில் முயற்சி பிரிவின் விற்பனை கண்காட்சி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW   
GalleryGallery