ஏறாவூரில் பழங்களைத் திருடிய நபர் கைது

Sri Lanka Police Batticaloa Eastern Province Crime
By Rakshana MA May 29, 2025 09:30 AM GMT
Rakshana MA

Rakshana MA

ஏறாவூரில் மாதுளம் பழங்களைத் திருடிய நபரொருவர் அதனை விற்பனை செய்ய ஓட்டமாவடிக்கு கொண்டு சென்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த திருட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் இன்றைய தினம் (29)  வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிரடி மாற்றம் கண்ட தங்க விலை..! வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

அதிரடி மாற்றம் கண்ட தங்க விலை..! வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

திருட்டு சம்பவங்கள் 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஏறாவூரிலுள்ள பழவகைக் கடையொன்றில் மாதுளம் பழங்களை பெட்டியுடன் சூசகமாக திருடிய நிலையில், ஓட்டமாவடியிலுள்ள பழவகைக் கடை ஒன்றில் விற்பனை செய்ய முயன்றுள்ளார்.

இந்நிலையில், ஓட்டமாவடியைச் சேர்ந்த பழவகைக் கடை உரிமையாளர் ஒருவர் குறித்த நபர் மீது சந்தேகம் கொண்டதால் பொலிஸாருக்கு முறைப்பாடு கொடுத்துள்ளார்.

ஏறாவூரில் பழங்களைத் திருடிய நபர் கைது | Man Caught Selling Stolen Fruits In Ottamavadi

இதனை தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

அதேவேளை, குறித்த கைது செய்த சந்தேக நபர் ஏற்கனவே பல திருட்டு சம்பவங்களில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு

தம்பலகாமத்தில் இளைஞர் யுவதிகளுக்கான மாபெரும் தொழிற் சந்தை

தம்பலகாமத்தில் இளைஞர் யுவதிகளுக்கான மாபெரும் தொழிற் சந்தை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW