இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த

CID - Sri Lanka Police Mahinda Rajapaksa Sri Lanka Bribery Commission Sri Lanka
By Vinoja May 12, 2026 05:26 PM GMT

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இன்று(12) காலை 9 மணியளவில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மறைந்த கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலத்துக்கமைய மகிந்த ராஜபக்சவிற்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த | Mahinda Rajapaksa Leaves Ciaboc After Appearing

2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்களைக் கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த அறிவித்தலுக்கு அமைவாகவே மகிந்த ராஜபக்ச, முன்னிலையாகியுள்ளார்.