இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த
CID - Sri Lanka Police
Mahinda Rajapaksa
Sri Lanka
Bribery Commission Sri Lanka
By Vinoja
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இன்று(12) காலை 9 மணியளவில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மறைந்த கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலத்துக்கமைய மகிந்த ராஜபக்சவிற்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்களைக் கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த அறிவித்தலுக்கு அமைவாகவே மகிந்த ராஜபக்ச, முன்னிலையாகியுள்ளார்.