நபி வழி மருத்துவம் - எலுமிச்சை

Lemon World
By Fathima Jun 10, 2025 09:14 AM GMT
Fathima

Fathima

நபிவழி மருத்துவத்தின் இன்றைய பதிவில் எலுமிச்சை குறித்து தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளது.

குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று வாசனையும் நன்று” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூர்: புகாரீ: 5020)

எலுமிச்சையில் பற்பல பயன்கள் உள்ளன, அது தோல், சதை, புளிப்புத்தன்மை, விதை ஆகிய நான்கு விஷயங்களை உள்ளடக்கியுள்ளது. அவற்றில் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி குணம் உள்ளது.

அதன் தோல் காய்வுத்தன்மை கொண்ட வெப்பநிலை உடையதாகும். அதன் சதைப்பகுதி ஈரத்தன்மை கொண்ட வெப்பநிலை உடையதாகும். அதன் புளிப்புத்தன்மை காய்வுத்தன்மை கொண்ட குளிர்ச்சிநிலை உடையதாகும். அதன் விதைகள் காய்வுத்தன்மை கொண்டதாகும்.

அதன் தோல் ஆடைகளில் வைக்கப்பட்டால் அந்துப்பூச்சிகள் வருவதை தடுக்கும், இது அதன் தோலின் மிகப்பெரிய பயனாகும். அதன் வாடை கெட்ட காற்றை சீராக்கும், அதை வாயில் வைத்துக் கொண்டால் வாய்வாடையை சுத்தமாக்கும், நறுமணப் பொருட்களை போல் இதை உணவில் சேர்த்துக் கொண்டால் செரிமானத்திற்கு உதவும்.

நபி வழி மருத்துவம் - எலுமிச்சை | Lemon Benefits In Islam In Tamil

கானூன் எனும் நூலாசிரியர் கூறுகிறார், அதன் தோலின் சாற்றைக் குடிப்பது நச்சுப் பாம்புகளின் கடிக்கு மருந்தாகும். மேலும் கடிபட்ட இடத்தில் அதன் தோலை கட்டாகக்கட்டிக்கொள்ள வேண்டும், அதன் தோலை கரித்து தொழுநோய்க்கு மருந்தாக பூசிக்கொள்ளலாம்.

அதன் சதைப்பகுதி இரைப்பையின் சூட்டை தணிக்கக்கூடியதும், மஞ்சள் பித்தம் உடையோருக்கு பயனளிக்கக்கூடியதும் வெப்பத்தால் ஏற்படுகின்ற காய்ச்சலை கட்டுப்படுத்தக்கூடியதும் ஆகும்.

ஃகாஃபிக் என்ற அறிஞர் கூறியதாவது, அதன் சதைப்பகுதியை உண்பது மூலநோய்களுக்கு பயனளிக்கும். காரத்தன்மை கொண்ட அதன் இலைகள் பித்தத்தை கட்டுப்படுத்தி உடைக்கும், வெப்பத்தால் ஏற்படக்கூடிய நடுக்கத்தை அமைதிப்படுத்தும், இந்த இலையை சாறாக்கி குடிப்பதன் மூலமும் அஞ்சனமாக இட்டுக்கொள்வதன் மூலமும் மஞ்சள் காமாலை நோய்க்கு பயனளிக்கும்.

நபி வழி மருத்துவம் - எலுமிச்சை | Lemon Benefits In Islam In Tamil

பித்தவாந்தியை நிறுத்தக்கூடியது, பசியை தூண்டக்கூடியது, பித்தத்தால் ஏற்படக்கூடிய வயிற்றுப்போக்கை குணப்படுத்தக்கூடியது. கடும் வெப்பத்தால் உடலில் ஆங்காங்கே ஏற்படும் கன்றிய பகுதிகள் மீது வெளிப்பூச்சாக இடுவதால் அது குணமாகும், தோல் நோய்களையும் குணமாக்கும்.

ஆடைகளில் அது பட்டால் அவற்றில் அழுக்குகள் நீங்கிவிடும். ஈரலின் சூட்டைப் போக்கும், இரைப்பையை வலுப்படுத்தும், மஞ்சள் பித்தத்தின் வேகத்தை தடுக்கும், அதனால் ஏற்படுகின்ற கவலையை நீக்கும், தாகத்தை தணிக்கும்.

- பேரறிஞர் ஷம்சுத்தீன் முஹம்மது இப்னு அபீபக்ர் இப்னு கய்யிம் (ரஹ்)