குவைட்டில் கைதான இலங்கை கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் விடுதலை

Sri Lanka Kuwait
By Kamal Aug 04, 2024 03:27 AM GMT
Kamal

Kamal

குவைட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை கலைஞர்கள் உள்ளிட்ட 26 பேரில் 24 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சு இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.

எதேர அபி என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியின் போது இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

துருக்கியில் இன்ஸ்டாகிராமிற்கு தடை

துருக்கியில் இன்ஸ்டாகிராமிற்கு தடை


குவைட்டில் கைதான இலங்கை கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் விடுதலை | Kuwait Summer Nites

இலங்கையர்கள் விடுதலை 

இலங்கையின் பிரபல இசைக் கலைஞர்களான இந்திரசாப, ஜொலிசீயா, உபேகா நிர்மானி உள்ளிட்ட கலைஞர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குவைட்டுக்கான இலங்கைத் தூதரகத்தின் தலையீட்டில் இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குவைட்டில் கைதான இலங்கை கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் விடுதலை | Kuwait Summer Nites

இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இருவர் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக குவைட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உரிய அனுமதி பெற்றுக்கொள்ளாது சிறிலங்கன் சமர் நைட்ஸ் என்ற இசை நிகழ்ச்சியை எற்பாடு செய்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

தபால்மூல வாக்காளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

தபால்மூல வாக்காளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW