நபிவழி மருத்துவம்- கருஞ்சீரகம்
அபூஹீரைரா(ரலி) அவர்கள் கூறியதாவது, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ”கருஞ்சீரக விதையில் சாமைத் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது” என்று கூறினார்கள்.
இப்னு ஜிஹாப் அஸ்ஸீஹ்ரி(ரஹ்) அவர்கள் கூறினார்கள் சாம் என்றால் மரணம் என்று பொருள். இது முற்றிலும் அதிக பயன்களை கொண்டது.
அது எல்லா நோய்க்கும் மருந்து என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே அது தன் இறைவனின் கட்டளைப்படி எல்லாவற்றையும் அழித்துவிட்டது என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான். அதாவது எல்லாப் பொருள்களும் அத்தோடு அவற்றை சார்ந்தவையும் அழிவுக்குள்ளாயின.
கருஞ்சீரகம் காய்வுத்தன்மையுடைய வெப்பத்தால் உண்டாகும் நோய்களுக்கும் அருமருந்தாகும். எனவே இதை குறைந்த அளவே சாப்பிட்டவுடன் ஈரத்தன்மையுடைய குளிர்ச்சியான மருந்துகளின் ஆற்றலை இது உடனடியாக உடலுக்குள் ஊடுருவிச் செல்ல துணைபுரிகிறது. மேலும் அந்நோயை குணப்படுத்திவிடுகிறது.
கருஞ்சீரகம் இரண்டாம் நிலை வெப்பமும் காய்வுத்தன்மையும் உடையது, குறட்டையை நீக்கக்கூடியது. வழுக்கை தலை குறைபாட்டை நீக்கக்கூடியது. தொழுநோய் நான்கு நாட்களுக்கு ஒருமுறை விட்டுவிட்டு வரும் காய்ச்சல் சளிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்தக்கூடியது.
இரத்தநாள அடைப்புகளை நீக்கக்கூடியது, வாயுக்களை வெளியேற்றக்கூடியது, இரைப்பையின் ஈரத்தன்மையை உலர்த்தக்கூடியது. கருஞ்சீரகத்தை நன்றாக தட்டி, அதைத் தேனோடு குழைத்து வெந்நீரில் குடித்தால் சிறுநீர்ப்பையிலும் சிறுநீரகங்களிலும் உள்ள கற்களை கரைத்துவிடும், இதைத்தொடர்ந்து பல நாட்கள் குடித்து வந்தால் சிறுநீர் பிரிதல், மாதவிடாய் வெளியேறுதல், பால் சுரத்தல் ஆகியவை செவ்வனே நடைபெறும்.
தட்டிப் பிழிந்தெடுத்த கருஞ்சீரகச் சாற்றைப் புளிக்காடியோடு சூடுபடுத்தி வயிற்றின்மீது தடவி வந்தால் அது வயிற்றிலுள்ள வழுக்கைத் தலை புழுக்களை கொன்றுவிடும், அதோடு காய்ச்சாத அல்லது காய்ச்சிய குமட்டிக்காய்ச் சாற்றை கலந்து குழைத்து உண்டுவந்தால் அது வயிற்றிலுள்ள புழுக்களை வெளியேற்றுவதில் வீரியமாக செயல்பட்டு வயிற்றை சுத்தப்படுத்திவிடும்.
குளிர்ச்சியால் ஏற்பட்ட தும்மலை குணமாக்க கருஞ்சீரகத்தை தட்டி ஒரு துண்டுத்துணியில் கட்டி தொடர்படியாக முகர்ந்து வந்தால் போதுமானது. கருஞ்சீரக எண்ணையை தேய்த்து வந்தால் வழுக்கை கரணைகள் மருக்கள் புடைத்த மருக்கள் உள்ளிட்ட நோய்கள் குணமாகும். இதன் எண்ணெய்யை தண்ணீரோடு கலந்து குடித்து வந்தால் மூச்சுத்திணறலுக்கு மிகவும் நல்லது.
கருஞ்சீரக எண்ணெயை நெற்றியில் தடவி ஒரு துணியால் கட்டிக்கொண்டால் குளிர்ச்சியால் ஏற்படும் தலைவலி குணமாகும். ஏழு கருஞ்சீரக வித்துக்களை எடுத்து தட்டி தாய்ப்பாலில் கலந்து மஞ்சள் காமாலை உள்ளவரின் மூக்கில் சொட்டு மருந்தாக ஊற்றினால் முற்றிலும் பலனை காணலாம்.
சமையல் காடியோடு அதன் எண்ணெயை காய்ச்சி அதை வாயில் ஊற்றிக் கொப்பளித்தால் குளிர்ச்சியால் ஏற்படும் பல்வலி காணாமல் போய்விடும். கருஞ்சீரகத்தை அரைத்து தூளாக்கி சொட்டு மருந்தாக இட்டால் அவ்வப்போது கண்ணில் ஏற்படும் நீர்க்கசிவை நிறுத்திவிடும். அதைச்சமையல் காடியோடு சேர்த்து நன்றாக தட்டிப்பற்றுப்போட்டால் முகப்பருக்களையும் முகத்தில் சொறியால் ஏற்பட்டுள்ள புண்களையும் அகற்றிவிடும்.
மேலும் நாள்பட்ட சளியால் ஏற்பட்ட வீக்கங்களையும் கடினமாக வீக்கங்களையும் போக்கிவிடும். அதன் எண்ணெய்யைச் சொட்டு மருந்தாக இட்டால் முகவாதம் குணமாகும். கருஞ்சீரகத்தை மென்மையாக தட்டி, அதை தண்ணீரில் கலந்து ஒவ்வொரு நாளும் இரண்டு கரண்டி அளவிற்கு பருகினால் நாய்க்கடி பட்டவனுக்கு மிகுந்த பயனைத்தரும்.
ஒருவன் இறந்துபோவதிலிருந்து முற்றிலும் பாதுகாப்பைப் பெறலாம். கருஞ்சீரகத்தை எரித்து புகையூட்டினால் தொல்லை தரும் பூச்சிகளை விரட்டிவிடும். பெருங்காயத்தை நீரில் கரைத்து, உள்தொண்டையில் தடவி, பின்னர் அதன்மீது கருஞ்சீரகத் தூளைப்போட்டால், தரமான தூளாக இருந்தால் மூலத்தை குணமாக்கும்.
அதன் பயன்கள் பல மடங்கு அதிகமானது. அதில் இரண்டு கரண்டி அளவிற்குத்தான் குடிக்க வேண்டும், அதைவிட மிகுதியானால் அது உயிரையே மாய்க்கும் என மருத்துவ அறிஞர்கள் கூறியுள்ளனர்.