கந்தளாய் மாவட்டத்தில் சோளப் பயிர்ச்செய்கைக்காக காணி வழங்கும் திட்டம் முன்னெடுப்பு
மிக நீண்ட காலமாக, பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்படாது, கைவிடப்பட்ட நிலையில் இருந்த, கந்தளாய் சீனி தொழிற்சாலையின் 2000 ஏக்கர் விவசாய நிலம், சோள செய்கைக்காக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு, இன்று(11) கந்தளாய் சீனி தொழிற்சாலை வளாகத்தில், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் W. G. M. ஹேமந்த குமார தலைமையில் நடைபெற்றது.
காணி வழங்கும் திட்டம்
இதன் போது, விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்தவினால் சோளப் பயிர்செய்கைக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோர் கலந்துகொண்டு, காணி அனுமதி பத்திரங்களை வழங்கி வைத்தனர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |







