புத்தளத்தில் நீதிமன்ற வளாகத்தில் திருட்டில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

Puttalam Sri Lanka Police Investigation Crime
By Laksi Sep 28, 2024 11:25 AM GMT
Laksi

Laksi

கற்பிட்டி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கு பொருட்களை வைக்கும் அறையிலிருந்து பூச்சிகொல்லி மருந்துகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவானது நேற்று (27) புத்தளம் நீதவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி

விளக்கமறியல்

இவர் கற்பிட்டி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த போது வழக்கு பொருட்களை வைக்கும் அறையிலிருந்து பூச்சிகொல்லி மருந்துகளைத் திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளத்தில் நீதிமன்ற வளாகத்தில் திருட்டில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல் | Kalpitiya Police Constable Has Been Remanded

இதனையடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நேற்று (27) புத்தளம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது  அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW