மோடி ட்ரம்ப்க்கு வழங்கிய வாக்குறுதியால் சிக்கலில் ரஷ்யா
ரஷ்யாவில் எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், “பிரதமர் மோடி எனது நண்பர்.
எங்களுக்குள் சிறந்த உறவு இருக்கின்றதுடன் இந்தியா ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதில் எனக்கு மகிழ்ச்சியில்லை.
அபத்தமான போர்
அத்தோடு, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று என்னிடம் மோடி உறுதியளித்தார்.
சீனாவையும் இதனைச் செய்ய வைக்க வேண்டும், ரஷ்யா அபத்தமான போரைத் தொடர்கின்றது.
போர் நிறுத்தத்தை காண நான் விரும்புகின்றேன் எனவே இந்தியா எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை.
ரஷ்ய ஜனாதிபதி
மத்திய கிழக்கில் கடந்த வாரம் நாங்கள் செய்ததை ஒப்பிடும்போது இது எளிதானது என்பது உங்களுக்கு தெரியும்.
அது 3,000 ஆண்டுகள் பிரச்சினை ஆனால் இது வெறும் மூன்று ஆண்டு போர் மட்டுமே.
நாங்கள் ரஷ்யா மற்றும் உக்ரைன் போரை நிறுத்திக் காட்டுவோம், அத்துடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் போரை நிறுத்துவார் என்று நினைக்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |