இஷாரா செவ்வந்திக்கு பிரதி அமைச்சர் பாராட்டு
Ishara sewwandi
NPP Government
T.B. Sarath
By Faarika Faizal
இஷாரா செவ்வந்தியின் வலிமை, அறிவு மற்றும் திறன் இந்த நாட்டைக் கட்டியெழுப்பப் பயன்படுத்தப்பட்டிருந்தால், எவ்வளவு சிறந்த நாட்டை நாம் கட்டியெழுப்ப முடிந்திருக்கும் என்று வீட்டுவசதி பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டை கட்டியெழுப்புவதற்கு முக்கியம்
அத்துடன், குற்றத்திற்குப் பிறகு ஒரு பெண்ணாக அவர் மேற்கொண்ட பயணத்தை நாம் கருத்தில் கொள்ளும்போது, அவர் ஒரு அறிவுஜீவி என்பது தெளிவாகிறது என்று அவர் கூறினார்.
மேலும், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தனது பலம், அறிவு மற்றும் திறன்களைப் பங்களிப்பது முக்கியம் என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |