தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள கட்சிகளின் செயலாளர்கள்

Election Commission of Sri Lanka Election
By Mayuri Oct 15, 2024 04:13 AM GMT
Mayuri

Mayuri

பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு, குறித்த தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் செயலாளர்கள் இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பொதுத் தேர்தல் செலவு வரம்புகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வாக்களருக்கு செலவிடக்கூடிய உச்சபட்ச தொகை

அதேநேரம், இந்த தேர்தல் செலவுகள் தொடர்பில் சுயேட்சை குழுக்களின் தலைவர்களுடன் அந்தந்த மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அதிகாரிகள் கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள கட்சிகளின் செயலாளர்கள் | Invitation To Secretaries Of Parties

குறித்த கலந்துரையாடல்களின் போது எட்டப்படும் முடிவுகளுக்கமைய, வேட்பாளர் ஒருவரால் வாக்களருக்கு செலவிடக்கூடிய உச்சபட்ச தொகை உள்ளிட்ட விடயங்களைத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானிக்கும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW