வர்த்தக துறையில் இலங்கைக்கான முதலீடு
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் இளைப்பாறிய மேஜர் ஜெனரல் பஹீம்-உல்-அஸீஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் அழைப்புக்கமைய, நேற்று (18) நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்றுள்ளது.
இலங்கைக்கான முதலீடு
இதன்போது, லாஹூர் பிராந்திய கொன்ஸல் ஜெனரல் யாஸின் ஜோயிஆ தலைமையில், தற்போது இலங்கை வந்துள்ள வர்த்தக தூதுக் குழுவினர், வர்த்தக துறையில் இங்கு முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
குறிப்பாக தகவல் தொழில் நுட்பம் மற்றும் உல்லாச சுற்றுலாத்துறை தொழிலாண்மை என்பவற்றை மையப்படுத்தியதாக நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
