இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பொது முறைப்பாடுகளை விசாரணை செய்ய புதிய பிரிவு
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பொது முறைப்பாடுகளை பெற்று விசாரணை செய்வதற்கான உள்விவகாரப் பிரிவு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கும் சுங்கத்துக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதே இதன் நோக்கம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கொடுக்கப்பட்ட வருவாய் இலக்குகளுக்கு அப்பால் சென்ற சுங்கத் திணைக்களம் நாட்டிற்கு தனித்துவமான பணியை செய்து வருகிறது.
உறவை வலுப்படுத்தும் பிரிவு
அதன் காரணமாக பல்வேறு பாராட்டுக்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.
எனவே, இப்பிரிவு பொதுமக்களுக்கும் திணைக்களத்துக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும்.
எதிர்காலத்தில் உள்ளூர் வருவாய் மற்றும் கலால் திணைக்களங்களுக்கும் இந்த முறை அறிமுகப்படுத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |