இந்திய வெளிவிவகார அமைச்சர் ரணிலுடன் பேச்சுவார்த்தை

Ranil Wickremesinghe India
By Kamal Oct 04, 2024 01:21 PM GMT
Kamal

Kamal

 உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

புதிய அரசாங்கம் இந்தியாவுடனான வலுவான உறவைப் பேணுமென நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே, முன்னாள் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ரணிலுடன் பேச்சுவார்த்தை | Indian Foreign Sec Meets Ranil

கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.