கொழும்பில் உள்ள மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

By Thulsi Apr 27, 2024 04:26 AM GMT
Thulsi

Thulsi

கொழும்பின் பல பகுதிகளில் 14 மணித்தியால நீர் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று (27) மாலை 5 மணி முதல் நாளை (28) காலை 7 மணி வரை நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

திருத்தப் பணிகள்

கொழும்பு 5, 6, தெஹிவளை - கல்கிசை மற்றும் மொரட்டுவை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும், ஜயந்திபுர, பெலவத்த பிரதேசங்களிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

கொழும்பில் உள்ள மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Important Announcement About Water Cut In Colombo

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப் பணிகள் காரணமாக நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.