ஓட்டமாவடியில் பலத்த காற்றினால் படுகாயமடைந்த இருவர்!
Sri Lankan Peoples
Climate Change
Eastern Province
Weather
By Rakshana MA
பலத்த காற்றுடனான மழை காரணமாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் வீடொன்றின் மீது கூரை அடித்து செல்லப்பட்டு முன்னாலிருந்த வீட்டின் மீது விழுந்துள்ளது.
நேற்று (30) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த இருவர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
பலத்த காற்று..
இவ்வாறு காயத்துக்கு இலக்கானவர்கள் கணவன் மற்றும் மனைவி ஆவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது, தலையில் பலத்த காயங்களுடன் 66 வயதுடைய சீனி முஹம்மது செய்லத்தும்மா என்பவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |