மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை
இஸ்லாமியர்களால் ஹஜ் பெருநாள் நிகழ்வுகள் மன்னாரில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மன்னார் (Mannar) - மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலில் இன்றைய தினம் (07.06.2025) ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள் இடம் பெற்றது.
காலை 6.45 மணிக்கு பெண்களுக்கும் காலை 7.30 மணியளவில் ஆண்களுக்கும் பெருநாள் தொழுகை இடம் பெற்றது.
பெருநாள் தொழுகை
இவ் தொழுகை மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலின் மௌலவி எம்.அஸீம் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது ஹஜ்ஜுப் பெருநாளின் முக்கியத்துவம், அல்குர்ஆன் சமய நற்சிந்தனைகள், பற்றியும் இங்கு எடுத்துக் கூறப்பட்டது.
மேலும் விசேடமாக துவா தொழுகைகள் இடம் பெற்றதுடன், மாவட்டத்தில் உள்ள ஏனைய பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகைகள் சிறப்பாக இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
News : - ஜோசப் நயன்
வவுனியா பெருநாள் தொழுகை
இதேவேளை, வவுனியா தவ்ஹீத் ஜும்ஆ பள்ளிவாசல் ஏற்பாட்டில் புனித ஹஜ்ஜிப்பெருநாள் திடல் தொழுகை பட்டாணிச்சூரின் வேப்பங்குள குளவீதியில் நடை பெற்றது.
ஜமாஅத்தின் தலைவர் அஷ்ஷெய்க் ஸாதிகீன்(பாரி)யினால் தொழுகை நடாத்தப்பட்டதுடன் இஸ்லாமியர்கள் பலரும் கலந்து தொழுகையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





