மட்டக்களப்பில் துப்பாக்கி சூடு.. ஒருவர் காயம்
மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னங்குடாவில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று (02) பகல் இரு நபர்களுக்கு இடையே நடைபெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில், துப்பாக்கிச்சூடாக மாறியுள்ளது.
துப்பாக்கி சூடு
கன்னங்குடா கண்ணகியம்மன் ஆலய வீதியில் இடம்பெற்ற இந்த சூட்டு சம்பவத்தில், பா.சதீஸ்குமார் என்னும் 36வயதுடைய ஒருவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நீர் விநியோகம் தொடர்பாக இருவரிடையே ஏற்பட்ட மோதலின்போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கியால் இந்த துப்பாக்கிசூடு நடாத்தப்பட்டுள்ளது.
பொலிஸாரினால் துப்பாக்கி மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |