வாகன விலையில் தாக்கம் செலுத்தும் அரசாங்கத்தின் புதிய வரிகள்
அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள யோசனைகளின்படி பெறுமதி சேர்க்கப்பட்ட மற்றும் சமூக பாதுகாப்பு வரிகளின் வரம்பு குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சுமார் 150 பில்லியன் வரி வருமானத்தை நோக்காகக்கொண்டு, 25,000 முதல் 30,000 புதிய வரி கோப்புகள் திறக்கப்படும் என்று ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
வரவுசெலவுத்திட்டம்
அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில், இந்த இரண்டு வரிகளின் வரம்பு வருடம் ஒன்றுக்கு 60 மில்லியன்களில் இருந்து 36 மில்லியன் ரூபாய்களாக குறைக்கப்பட யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத்திட்டம் டிசம்பரில் நிறைவேற்றப்பட்டதும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சமூக பாதுகாப்பு வரி செலுத்துவதைத் தவிர்த்து வந்த வாகன இறக்குமதியாளர்களும் புதிய வரி நடவடிக்கைகளின் கீழ் வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.