பொதுத்தேர்தல் நடந்தால் தேசிய மக்கள் சக்திக்கே கூடுதல் வெற்றி வாய்ப்பு
தற்போதைய நிலையில் பொதுத் தேர்தல் ஒன்று நடைபெற்றால் தேசிய மக்கள் சக்திக்கே கூடுதல் வெற்றி வாய்ப்பு இருப்பதாக புதிய கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது.
சுகாதார கொள்கைகளுக்கான நிலையம் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்திய கருத்துக் கணிப்புகளின் பிரகாரம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
குறித்த கருத்துக் கணிப்புகளின் பிரகாரம் தற்போதைய நிலையில் தேர்தல் ஒன்று நடைபெறும் பட்சத்தில் 43 வீதமான வாக்குகள் தேசிய மக்கள் சக்திக்கே கிடைக்கும்.
ஐக்கிய மக்கள் சக்தி 30 வீத வாக்குகளையே பெறும்.
புதிய கருத்துக் கணிப்பு
ஐக்கிய தேசியக் கட்சியும், பொதுஜன பெரமுனவும் தலா நான்கு வீத வாக்குகளை மட்டுமே பெறும் என்றும் குறித்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
ஏனைய கட்சிகள் சுமார் 15 வீதமான வாக்குகளைப் பெறக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்துக் கணிப்பில் சிறு மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் ஆனால் பாரியளவான மாற்றங்களுக்கு சாத்தியம் இல்லை என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது