ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் கொடூரமான முறையில் கொலை

Sri Lanka Police Galle Death
By Vethu Feb 28, 2025 03:07 AM GMT
Vethu

Vethu

தென்னிலங்கையில் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

காலி, பத்தேகம, மத்தேவில பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் வன்முறை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.