இஸ்லாத்தின் தூண்கள்
இஸ்லாம் ஐந்து அம்சங்களின் மீது நிறுவப்பட்டுள்ளது, அவை அல்லாஹ்வை தவிர வேறு கடவுள் இல்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என உறுதியாக நம்புதல், தொழுகையை நிலைநாட்டுதல், ஸகாத் கொடுத்தல், ஹஜ் செய்தல், ரமலானில் நோன்பு வைத்தல் என முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தூண்கள்
கலிமா- அல்லாஹ்வை தவிர வேறு கடவுள் இல்லை என்றும் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் எனவும் நம்பிக்கை சான்று பகருதல்
தொழுகை- நாள் ஒன்றுக்கு குறைந்தது ஐந்து வேளை தொழுகை செய்வது
நோன்பு- ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது, சூரியன் உதயமாகும் நேரம் முதல் மறையும் நேரம் வரை நோன்பு நோற்பது.
ஸகாத்- வசதி படைத்தவர்கள் தனது சொத்தில் ஏழைகளுக்கும், தகுதியுள்ள பிறருக்கும் கொடுக்க வேண்டும்.
ஹஜ்- புனித யாத்திரை மேற்கொள்ளுதல், வசதிபடைத்த ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் இது கடமையான ஒன்று, வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ் செய்திருக்க வேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |