காத்தான்குடியில் சற்று முன் தீ பரவல்
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவு உட்பட்ட பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று (31) தீ பரவல் ஏற்பட்டது.
காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள பல்பொருள் அங்காடி வர்த்தக நிலையம் ஒன்றினுள் ஏற்பட்ட பாரிய தீ பரவல் காரணமாக வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
இதனால் பல இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீப்பரவல்
குறித்த இடத்திற்கு மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைக்கும் படையினர் மற்றும் காத்தான்குடி நகரசபை தீயணைப்பு படையினர் வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த போதும் வர்த்தக நிலையம் முற்றாக எறிந்து சாம்பலாகியுள்ளது .
பொலிஸாரால் அங்கிருந்து ஓரளவு பொருட்கள் காப்பாற்றப்பட்டதுடன், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



