அத்தியவாசிய பொருட்களின் விலை உயர்வு

Food Shortages Sri Lanka Economic Crisis Sri Lanka Food Crisis Economy of Sri Lanka
By Rakshana MA Jun 21, 2025 07:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

மின்சாரக் கட்டண அதிகரிப்பைத் தொடர்ந்து, அத்தியாவசிய நுகர்வு பொருட்களின் விலைகளும் தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

நாடு முழுவதும் அரிசி, தேங்காய், காய்கறிகள், மீன், இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகள் சந்தையில் பெருமளவில் உயர்ந்துள்ளதால், மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

அத்துடன் சவர்க்காரம், சலவைத்தூள், பற்பசை மற்றும் ஷம்போ போன்ற பொருட்களின் விலைகளும் கடுமையாக அதிகரித்துள்ளன.

மாணவர்களின் சுமைகளை குறைப்பது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு

மாணவர்களின் சுமைகளை குறைப்பது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு

அத்தியவாசிய பொருட்களின் விலை

மேலும், வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தங்கள் நுகர்வுப் பொருட்களை தன்னிச்சையான விலையில் விற்பனை செய்வதால் நுகர்வோர் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதால், அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு விலைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று நுகர்வோர் சங்கங்கள் கூறுகின்றன.

அத்தியவாசிய பொருட்களின் விலை உயர்வு | Essential Goods Price Hike Crisis

அத்துடன், அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை நீதியின் முன் நிறுத்த சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்றும் நுகர்வோர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, தனியார் வகுப்புகளின் கட்டணங்கள் பெருமளவில் அதிகரித்ததால் பெற்றோர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

பல வகுப்புகளின் கட்டணம் ரூ.3000 - 6000, 7000 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சர் இந்த விடயத்தில் தலையிட்டு சரியான முடிவை எடுக்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பாடசாலை பணியகத்தில் அரசியல்வாதிகளை நீக்க வேண்டும் : இம்ரான் எம்.பி கோரிக்கை

பாடசாலை பணியகத்தில் அரசியல்வாதிகளை நீக்க வேண்டும் : இம்ரான் எம்.பி கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW