கிண்ணியாவில் சர்வதேச சுற்றாடல் தின நிகழ்வுகள்
கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட ரஹ்மானியா நகர் கிராம உத்தியோதர் பிரிவில் சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றாடல் வார நிகழ்வுகள் இன்று(4) இடம் பெற்றது.
கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச். முகமது கனி தலைமையின் கீழ், இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
சுற்றாடல் தின நிகழ்வுகள்
இதன்போது, கரையோர பகுதிகளில் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு, உல்லாச பயணிகளின் விருப்பத்துக்குரிய இடமாக ரஹ்மானியா நகர் கடற்கரை பிரதேசம் மாற்றியமைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், ரஹ்மானியா நகர் கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் ஏனைய கிராம உத்தியோகத் பிரிவுகளை சேர்ந்த கிராம உத்தியோகத்தர்களும் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




