கல்முனையில் முன்னெடுக்கவுள்ள விசேட செயற்பாடு

Sri Lankan Peoples Eastern Province Kalmunai
By Rakshana MA Jun 01, 2025 09:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில ஆண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது.

மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டு வரும் விரும்பத்தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதனை மையமாக கொண்டு டயகோணியா மற்றும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி என்பனவற்றின் அனுசரணையில் எதிர்வரும் 5ஆம் திகதி விழிப்பூட்டல் ஊர்வலமும், கருத்தரங்கும் கல்முனையில் நடைபெறவுள்ளது.

புதிய எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

புதிய எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

விழிப்புணர்வு கருத்தரங்கு

உலக சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவது, அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதுமான விடயங்கள் தொடர்பான கருத்தரங்கும் இடம்பெறவுள்ளது.

கல்முனையில் முன்னெடுக்கவுள்ள விசேட செயற்பாடு | Environment Day Awareness 2025

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் ஏ.ஜி.ஏ. றிசாத் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம், சுற்றாடல் அதிகார சபை உயர் அதிகாரிகள், உள்ளிட்ட மாணவர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.  

முதல் இஸ்லாமிய பெண் பிரதிநிதி நியமனம்

முதல் இஸ்லாமிய பெண் பிரதிநிதி நியமனம்

திருட்டு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மூவர் கைது

திருட்டு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மூவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW