சம்மாந்துறையில் அதிகரித்துள்ள யானைகளின் அட்டகாசம்
Ampara
Elephant
Eastern Province
By Laksi
அம்பாறை - சம்மாந்துறை பகுதியில் தனியன் யானை ஒன்று திடீரென உட்புகுந்து மக்களின் குடியிருப்புக்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த யானையானது இன்று (9) காலை சம்மாந்துறை தமிழ் பிரிவு 4 – குவாசி நீதிமன்றத்திற்கு முன்னால் உள்ள வீட்டு காணிகளை சேதப்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் வேண்டுகோள்
இந்த நிலையில், கடந்த 2 தினங்களாக தனியன் யானை ஒன்று சம்மாந்துறை நூலகம் குவாஸி நீதிமன்ற பகுதிகளில் அட்டகாசம் செய்து சேதங்களை விளைவித்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே சம்பந்தம்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |