சம்மாந்துறையில் அதிகரித்துள்ள யானைகளின் அட்டகாசம்

Ampara Elephant Eastern Province
By Laksi Oct 09, 2024 06:10 AM GMT
Laksi

Laksi

அம்பாறை - சம்மாந்துறை பகுதியில் தனியன் யானை ஒன்று திடீரென உட்புகுந்து  மக்களின் குடியிருப்புக்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த யானையானது இன்று (9) காலை சம்மாந்துறை தமிழ் பிரிவு 4 – குவாசி நீதிமன்றத்திற்கு முன்னால் உள்ள வீட்டு காணிகளை சேதப்படுத்தியுள்ளது.

முன்னாள் எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

முன்னாள் எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

பொதுமக்கள் வேண்டுகோள்

இந்த நிலையில், கடந்த 2 தினங்களாக தனியன் யானை ஒன்று சம்மாந்துறை நூலகம் குவாஸி நீதிமன்ற பகுதிகளில் அட்டகாசம் செய்து சேதங்களை விளைவித்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சம்மாந்துறையில் அதிகரித்துள்ள யானைகளின் அட்டகாசம் | Elephant Attacked Sammanthurai Residential Area

எனவே சம்பந்தம்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விவசாயிகளுக்கான உர மானியம் குறித்து விஜித ஹேரத் வெளியிட்ட தகவல்

விவசாயிகளுக்கான உர மானியம் குறித்து விஜித ஹேரத் வெளியிட்ட தகவல்

திருகோணமலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

திருகோணமலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW