பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

Sri Lanka Police Election Commission of Sri Lanka Sri Lanka Police Investigation Election
By Mayuri Jul 29, 2024 02:22 AM GMT
Mayuri

Mayuri

ஜனாதிபதி வேட்பாளர் யாரேனும் பாதாள மற்றும் குண்டர்களின் ஆதரவைப் பெற முற்பட்டால் அவசர பொலிஸ் பிரிவி்ற்கு உடன் அறிவிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் நாடளாவிய ரீதியில் 45 பிரிவுகளில் அமைந்துள்ள அவசர பொலிஸ் அறைக்கு உடனடியாக அறிவிக்குமாறு தேர்தல் ஆணையகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கூடுதல் பாதுகாப்பு

அத்துடன் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், அந்த பாதுகாப்பில் எவரேனும் திருப்தியடையாத பட்சத்தில், அதற்கான காரணங்கனை கூறும் பட்சத்தில் கூடுதல் பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல் | Election Commission Special Notice

மேலும், இந்த தேர்தலை மிகவும் அமைதியான முறையில் நடத்த அனைத்து வேட்பாளர்களும் உழைக்க வேண்டும் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW