தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுமா..! கல்வியமைச்சு கூறியுள்ள விடயம்

Election Commission of Sri Lanka Ministry of Education Election Education
By Mayuri Sep 09, 2024 02:14 AM GMT
Mayuri

Mayuri

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லையென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கையை ஆராய்ந்து பாடசாலை விடுமுறை தொடர்பான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்படுமென அமைச்சு கூறியுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ள விடயம்

இந்த விடயம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு தேர்தல் ஆணைக்குழு கூறுகையில், வாக்கெண்ணும் நிலையங்களை தயார்படுத்தும் நடவடிக்கைகள் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்த பின்னர் ஆரம்பிக்கப்படும்.

தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுமா..! கல்வியமைச்சு கூறியுள்ள விடயம் | Education Ministry Announcement

வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகளை எதிர்வரும் 19ஆம் மற்றும் 20ஆம் திகதிகளில் தயார்படுத்த தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கல்வியமைச்சுடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW