ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இஸ்ரேலின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களால் பதற்றம் நிலவும் வேளையில், வடக்கு ஈரானில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம், ஈரானின் தலைநகர் தெஹ்ரானிலிருந்து தென்மேற்கே 37 கிலோமீட்டர் தொலைவில், செம்னான் மாகாணத்தில், சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம்
சோர்க் நகரைச் சுற்றி நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதுடன், சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தெஹ்ரானிலும் அதிர்வு உணரப்பட்டது என்று அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், உயிரிழப்புகள் அல்லது பெரும்பரிமாண சேதங்கள் தொடர்பாக இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஈரானிய ஊடகங்கள், இந்த நிலநடுக்கம் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளன.
இந்த நிலநடுக்கம் இயற்கை விபத்தாக இருந்ததா, அல்லது நிலத்தடி தாக்குதல்களுக்கான விளைவாக இருந்ததா என்பது தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
போர்சூழல் நீடிக்கும் இந்த தருணத்தில், இயற்கை பேரழிவும் மக்கள் மனநிலையை மேலும் பதற்றமடையச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |