திருகோணமலை கடற்பரப்பில் நிலநடுக்கம்!

By Dharu Sep 18, 2025 12:00 PM GMT
Dharu

Dharu

திருகோணமலை கடல் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

திருகோணமலைக்கு வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (18) மாலை சுமார் 4:06 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது .

இந்த நிலநடுக்கம் நாட்டில் நிறுவப்பட்ட நான்கு நில அதிர்வு அளவீடுகளாலும் பதிவு செய்யப்பட்டதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நில அதிர்வு அளவீடுகள் மகாகனதர, ஹக்மான, பல்லேகலே மற்றும் புத்தங்கல ஆகிய பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன.