கல்முனையில் சூட்சுமமான முறையில் ஐஸ் வியாரம் செய்தவர் கைது

Sri Lanka Police Sri Lankan Peoples Eastern Province Drugs
By Rakshana MA Jun 01, 2025 04:37 AM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை பின் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் நடமாடிய வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று (31) இரவு கல்முனை அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அதிரடிப்படையில் விசாரணை

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், 39 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் எனவும் இவர் நீண்ட நாட்களாக மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து ஐஸ் போதைப் பொருளை விற்பனை செய்து வருபவர் எனவும் குறிப்பிட்டனர்.

கல்முனையில் சூட்சுமமான முறையில் ஐஸ் வியாரம் செய்தவர் கைது | Drug Usage Sammanthurai Srilanka

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 3 கிராம் 510 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் உட்பட சான்றுப்பொருட்கள் யாவும் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உயர் மட்ட தொழிற்சங்க பேச்சுவார்த்தை : 11 அம்சக் கோரிக்கைகள் முன்வைப்பு

உயர் மட்ட தொழிற்சங்க பேச்சுவார்த்தை : 11 அம்சக் கோரிக்கைகள் முன்வைப்பு

காத்தான்குடியில் சற்று முன் தீ பரவல்

காத்தான்குடியில் சற்று முன் தீ பரவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  


GalleryGalleryGalleryGalleryGallery