தெற்காசியாவின் ஆச்சரியமான மையமாக மாறியுள்ள இலங்கை

Sri Lanka Police Sri Lanka Dubai Sri Lanka Police Investigation Crime
By Rakshana MA May 31, 2025 07:23 AM GMT
Rakshana MA

Rakshana MA

தெற்காசியாவிலே இலங்கையானது மிகவும் ஆச்சரியமான போதைப்பொருள் விநியோக மையமாக மாறியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கூற்றுக்கு சான்றாக அண்மைக்காலங்களில் மேற்கொள்ளப்பட்ட, போதைப்பொருட்களுடன் தொடர்பான கைதுகள் காணப்படுகின்றன.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலவரம் : வெளியான தகவல்

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலவரம் : வெளியான தகவல்

போதைப்பொருள் கடத்தல் 

இதன் காரணமாக, தற்போது இலங்கையானது  சர்வதேச ஊடகங்களிலும், தலைப்புச்செய்திக்குள் இடம்பிடித்துள்ளதாக ஊடகம் ஒன்றின் பத்தி எழுத்துப் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவின் ஆச்சரியமான மையமாக மாறியுள்ள இலங்கை | Drug Smuggling Srilanka

சில வாரங்களுக்கு முன்னர், பிரித்தானியாவின் யுவதி ஒருவர் குஷ் ரகப் போதைப்பொருட்களுடன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அவர் எடுத்து வந்த அல்லது அவருக்கு தெரியாமல் அவருடன் உடமைகள் ஊடாக கடத்தப்பட்ட, இந்த போதைப்பொருட்கள், இலங்கை, முக்கிய விநியோக மையமாக மாறியுள்ளதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதற்கு மத்தியில் கடந்த மூன்று வாரக்காலப்பகுதியில்; இலங்கையின் பிரதான விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தியதற்காக குறைந்தது நான்கு வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் பறிபோன உயிர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

மட்டக்களப்பில் பறிபோன உயிர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

மையமாக மாறிய இலங்கை

இதற்கிடையில், கிழக்கு மற்றும் தெற்கு கடற்கரைகளில் சந்தேகத்திற்கிடமான பல மீன்பிடி கப்பல்களில் இருந்து, இலங்கையின் கடற்படை பொருமளவு போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளது.

தெற்காசியாவின் ஆச்சரியமான மையமாக மாறியுள்ள இலங்கை | Drug Smuggling Srilanka

தென்கிழக்கு ஆசியா, தெற்காசியா மற்றும் அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவுக்கான கப்பல் பாதைகளுக்கு இடையில், தாய்லாந்து, மியான்மர் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு, முக்கிய மையமாக அமைந்துள்ளது.

இலங்கை அதிகாரிகளின் கூற்றுப்படி, பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள, குறைந்தது 35 இலங்கையர்கள், தற்போது துபாயில் தங்கி செயற்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்பலகாமத்தில் இளைஞர் யுவதிகளுக்கான மாபெரும் தொழிற் சந்தை

தம்பலகாமத்தில் இளைஞர் யுவதிகளுக்கான மாபெரும் தொழிற் சந்தை

மீறப்படாத சட்டங்கள் 

எனினும் அவர்கள் துபாயின் சட்டங்களை மீறவில்லை என்பதால், அந்த நாட்டு அரசாங்கம் அவர்கள் மீது நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தெற்காசியாவின் ஆச்சரியமான மையமாக மாறியுள்ள இலங்கை | Drug Smuggling Srilanka

இதன் காரணமாக, துபாய், அறியாமலோ அல்லது வேறுவிதமாகவோ, தெற்காசிய போதைப்பொருள் கடத்தல்காரர்களின் புகலிடமாக மாறியுள்ளது.

குறிப்பாக, கொழும்பைச் சேர்ந்த போதைப்பொருள் மன்னர்களுக்கு துபாய் இப்போது ஒரு புகலிடமாக உள்ளதாக குறித்த ஊடகத்தின் பத்தி எழுத்துப்பகுதியில் கூறப்பட்டுள்ளது.   

பொது மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

பொது மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

காத்தான்குடியில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் கைது

காத்தான்குடியில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW