இனவாதிகளுக்கு பலத்த அடி கொடுத்த வைத்தியர் ஷாபி! 30 செக்கன்களில் காப்பாற்றப்பட்ட 2 உயிர்கள்

Sri Lanka Sri Lankan Peoples Easter Attack Sri Lanka Channel 4 Easter Attack
By Sajithra May 03, 2026 01:11 AM GMT

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் அதிகம் பேசப்பட்ட, குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண் நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் தான் ஷாபி ஷிஹாப்தீன்.

வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் இந்த பெயரை அறியாதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம்.

குருநாகல் போதனா வைத்தியசாலையில் மகப்பேறு மற்றும் மகப்பேறியல் தொடர்பான சிரேஷ்ட அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்த இவர் சில அரசியல்வாதிகளாலும் ஊடகங்களாலும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகினார்.  

இந்நிலையில், வைத்தியர் ஷாபி, 30 வினாடிகளில் 2 உயிர்களைக் காப்பாற்றியுள்ளார் என்பது போன்ற செய்திகள், ஒரு மருத்துவராக அவர் காட்டிய மனிதாபிமானத்தையும் அர்ப்பணிப்பையும் பறைசாற்றுகின்றன.

இனவாத அரசியல் என்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை என்பதை உணர்த்திய இந்தச் சம்பவம், எதிர்காலத்தில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

பழிவாங்கல்களுக்குப் பிறகும் சளைக்காமல் தனது மருத்துவ சேவையைத் தொடரும் அவர், இனவாதிகளின் முகத்தில் விழுந்த பலத்த அடியாகவே இது  பார்க்கப்படுகிறார்.

இது உள்ளிட்ட பல அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,