இருவருக்கிடையிலான தகறாரில் அடித்து கொல்லப்பட்ட மட்டக்களப்பு நபர்

Anuradhapura Batticaloa Sri Lankan Peoples Crime Death
By Rakshana MA May 21, 2025 08:06 AM GMT
Rakshana MA

Rakshana MA

அநுராதபுரம் – மதவாச்சி பிரதேசத்தில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் வேலை செய்யும் இரு ஊழியர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று(20) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கொலை செய்யப்பட்டவர் மட்டக்களப்பு – வந்தாறுமூலை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடையவர் ஆவார் என குறிப்பிபட்டுள்ளனர்.

இன்று முதல் இடைநிறுத்தப்படும் ஊழியர் சேமலாப நிதிய சேவைகள்

இன்று முதல் இடைநிறுத்தப்படும் ஊழியர் சேமலாப நிதிய சேவைகள்

விசாரணை

சம்பவ தினத்தன்று, கோழி பண்ணையில் வேலை செய்யும் இரு ஊழியர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இருவருக்கிடையிலான தகறாரில் அடித்து கொல்லப்பட்ட மட்டக்களப்பு நபர் | Dispute Between Two People In Anuradhapura

தகராறின் போது சந்தேக நபர் சக ஊழியரை அடித்து கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கட்டுப்பாட்டு விலையை மீறிய வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை

கட்டுப்பாட்டு விலையை மீறிய வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை

திருகோணமலையில் போதைக்கு அடிமையானவர்களுக்கான புதிய திட்டம்

திருகோணமலையில் போதைக்கு அடிமையானவர்களுக்கான புதிய திட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW