வீட்டிலிருந்து கடைக்குச் சென்றவர் சடலமாக மீட்பு! கிண்ணியாவில் சம்பவம்

Sri Lanka Police Trincomalee Sri Lanka Police Investigation
By Mayuri Aug 21, 2024 02:46 AM GMT
Mayuri

Mayuri

கிண்ணியா பொலிஸ் பிரிக்குட்பட்ட, ஆலாங்கேணி பிரதேசத்தையும் பைசல் நகர் பிரதேசத்தையும் இணைக்கின்ற பாலத்தடியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்று இரவு (20) மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா, மஹரூப் நகர், 3 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான முஹம்மது லெப்பை முபாரக் (60 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

விசாரணை முன்னெடுப்பு

இவர் நேற்று (20) மாலை 5 மணிக்கு கடைக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

வீட்டிலிருந்து கடைக்குச் சென்றவர் சடலமாக மீட்பு! கிண்ணியாவில் சம்பவம் | Dead Body Found In Kinniya

சடலம் கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW