அரஃபா நாளின் சிறப்புகள் பற்றி அறிந்து கொள்வோம்
இஸ்லாமிய நாட்காட்டியில் 12வது மாதமான துல்ஹஜ் 9ம் திகதி அரஃபா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அதாவது ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முதல் தினம் அரஃபா தினமாகும்.
அரஃபா
மக்காவிற்கு கிழக்கே 12 மைல் தொலைவில் உள்ள மலையை சுற்றியுள்ள மைதானத்திற்கு சொல்லப்படும் பெயர் தான் அரஃபா.
எப்போதும் வெட்ட வெளியாக காட்சிதரும் அரஃபாவில், துல்ஹஜ் மாதம் 9ம் நாளில் ஹாஜிகள் ஒன்றுகூடுவர்.
ஹஜ் நிறைவேற்றக்கூடியவர்கள் சிறிது நேரமாவது சென்று தங்க வேண்டும், இறைவனிடம் பாவமன்னிப்பை தேடுவர்.
இன்றைய நாளிலேயே முகமது நபி(ஸல்) அவர்களின் இறுதி பேருரை நடைபெற்றது.
பெயர் காரணம்
அல்லாஹ் தடுத்த ஒரு செயலை செய்த காரணத்திற்காக ஆதம்(அலை) மற்றும் ஹவ்வா(அலை) அவர்களை சொர்க்கத்தில் இருந்து இறக்கி இருவரையும் வெவ்வேறு இடங்களுக்கு இறக்கி வைத்தான்.
அதன்பின்னர் இருவரும் நீண்ட காலம் பாவமன்னிப்பு தேடி ஒன்றிணைந்த இடம் தான் அரஃபா, இதன் காரணமாக ”அறிந்து கொண்ட இடம்” என்ற பெயர் வந்தது.
இதன் மையப்பகுதியில் உள்ள மலைப்பகுதியான ”ஜபலே ரஹ்மத்” மீதே பாவங்கள் மன்னிக்கப்பட்டது, எனவே அருளின் மலை என்ற பெயரும் வந்தது.
ஓத வேண்டிய துஆ
லாஇலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்.
(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன்).
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |