மட்டுநகரில் திறந்து வைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகம்

Sri Lanka Police Eastern Province Crime Branch Criminal Investigation Department
By Rakshana MA Jun 04, 2025 11:01 AM GMT
Rakshana MA

Rakshana MA

கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவின் கிழக்கு மாகாண அலுவலகம் மட்டக்களப்பில் உத்தியோகபூர்வமாக நிறுவப்பட்டு நேற்று (03) திறந்து வைக்கப்பட்டது.

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீயசூரயவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகம் 

கிழக்கு மாகாண குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் தெய்வநாயகம் மேனன் பதில் பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்டார்.

மட்டுநகரில் திறந்து வைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகம் | Crime Office Opens In Batticaloa Srilanka

காரைதீவைச் சேர்ந்த பொலிஸ் மேனன் இறுதியாக மட்டக்களப்பு மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரியாக பணியாற்றியவராவார்.

இந்த பிரிவு கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் நேரடி மேற்பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழ் செயற்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வர்ண ஜெசுந்தரவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

குச்சவெளியில் துப்பாக்கி சூடு : ரிஷாட் கண்டனம்

குச்சவெளியில் துப்பாக்கி சூடு : ரிஷாட் கண்டனம்

வரி செலுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

வரி செலுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW