கடன் அட்டைகளின் பாவனை தொடர்பில் வெளியான தகவல்
Sri Lanka
Sri Lankan Peoples
Money
CBSL
By Rakshana MA
இவ்வருடத்திற்கான(2025) கடனட்டை பாவனை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி(CBSL) தரவுகள் தெரிவிக்கின்றன.
குறித்த அதிகரிப்பானது பெப்ரவரி மாதத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கடந்த ஜனவரி மாதம் 2,018,996 ஆக இருந்த கடன் அட்டைகளின் பயன்பாடு பெப்ரவரி மாதம் 2,020,766 ஆக அதிகரித்துள்ளது.
கடன் அட்டை பாவனை
இது 0.1 சதவீத அதிகரிப்பாகும். அத்துடன் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் பாவனையிலுள்ள கடன் அட்டைகள் 0.6 சதவீதம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |