க்ளப் வசந்த கொலைச் சம்பவம் - மற்றுமொருவர் கைது

By Mayuri Aug 07, 2024 03:02 AM GMT
Mayuri

Mayuri

க்ளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

கடந்த ஜூலை 8ம் திகதி அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றது.

க்ளப் வசந்த கொலைச் சம்பவம் - மற்றுமொருவர் கைது | Club Vasantha Murder Case

இதன்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பாடகி கே. சுஜீவா உள்ளிட்ட நால்வர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW