கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Sri Lanka Climate Change Weather
By Rakshana MA Jun 01, 2025 03:04 AM GMT
Rakshana MA

Rakshana MA

இன்றைய நாளுக்கான (01) வானிலை அறிக்கையினை, வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) வெளியிட்டுள்ளது.

அதன்படி, மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இலங்கையில் மூலிகைத் தோட்டங்கள் நிறுவ திட்டம் முன்னெடுப்பு

இலங்கையில் மூலிகைத் தோட்டங்கள் நிறுவ திட்டம் முன்னெடுப்பு

விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அத்தோடு, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு சுமார் (30-40) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Climate Change Srilanka

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக உள்ளூர்மயமாக்கப்பட்ட பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

காத்தான்குடியில் சற்று முன் தீ பரவல்

காத்தான்குடியில் சற்று முன் தீ பரவல்

திருட்டு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மூவர் கைது

திருட்டு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மூவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW