கொட்டித் தீர்க்கப்போகும் மழை..! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Sri Lanka Climate Change Weather
By Rakshana MA May 31, 2025 03:04 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 36 மணி நேரத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது.

வானிலை குறித்து இன்றைய தினம் (31)  திணைக்களம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ.க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

காத்தான்குடியில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் கைது

காத்தான்குடியில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் கைது

விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அதேவேளை, வடமத்திய மாகாணத்திலும், மன்னார் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில தடவைகள் மழை பெய்யக்கூடும்.

கொட்டித் தீர்க்கப்போகும் மழை..! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Climate Change Srilanka

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

அதேபோல், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏறாவூரில் பழங்களைத் திருடிய நபர் கைது

ஏறாவூரில் பழங்களைத் திருடிய நபர் கைது

சம்பூரில் யானை தாக்கி முதியவர் பலி

சம்பூரில் யானை தாக்கி முதியவர் பலி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW