இலங்கையில் ஏற்பட்ட காலநிலை மாற்றம்

Sri Lanka Weather
By Fathima Jan 23, 2026 04:40 AM GMT
Fathima

Fathima

25 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று காலை 8.30 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேரத்தில் நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.5 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளது.

2000 ஆம் ஆண்டுக்குப் பின்னரே இவ்வளவு குறைந்தபட்ச மதிப்பு பதிவாகியுள்ளது.

நேற்று அதிகாலையில் நுவரெலியாவில் உள்ள கிரெகரி ஏரி, ரேஸ்கோர்ஸ், கோல்ப் மைதானம் மற்றும் விக்டோரியா பூங்கா, காய்கறி வயல்கள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் உறைபனி விழுந்தது.

காற்றின் வடிவத்தில்

காற்றின் வடிவத்தில் ஏற்பட்ட மாற்றம் பதிவு செய்யப்பட்ட குறைந்தபட்ச வெப்பநிலையைப் பாதித்துள்ளத. மேலும் வடக்கிலிருந்து நாட்டிற்குள் நுழையும் குளிர்ந்த, வறண்ட காற்று இதற்குக் காரணம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் | Climate Change In Sri Lanka After 25 Years

வானத்தில் மேகங்கள் இல்லாதபோது பூமி பகலில் நன்றாக வெப்பமடைகிறது, இரவில் நன்றாக குளிர்ச்சியடைகிறது, இது வெப்பநிலையையும் பாதிக்கிறது என குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இன்றைய தினம் காற்றின் வடிவம் மாற்றமடையும். கிழக்கிலிருந்து வீசும் காற்று காரணமாக இந்த நிலைமை மாறும். வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என்றும், வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் சில இடங்களில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு நிலைய பணிப்பாளர் கூறினார்.

ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல முறை மழை பெய்யும் எனவும் மீதமுள்ள பகுதிகளில் மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அவர் கூறியுள்ளார்.