IMF உடனான பேச்சுவார்தை குறித்து சம்பிக்க ரணவக்கவின் வலியுறுத்தல்

International Monetary Fund Anura Kumara Dissanayaka Champika Ranawaka
By Sajithra Oct 02, 2024 03:43 PM GMT
Sajithra

Sajithra

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செய்ய வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், 

"சர்வதேச நாணய நிதியத்துடன், புதிய ஜனாதிபதி வெளிப்படையான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பார் என்று நாம் நம்புகிறோம்.

கடன் வழங்குனநர்கள் 

ஏனெனில், 2023ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி, நாடாளுமன்றிலுள்ள எந்தவொரு கட்சியுடனும் கலந்துரையாடாமல் தான் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டார்.

IMF உடனான பேச்சுவார்தை குறித்து சம்பிக்க ரணவக்கவின் வலியுறுத்தல் | Champika Ranawaka Emphasis On Agreement With Imf

இதன் பின்னர், தான் நாடாளுமன்றுக்கு இந்த விடயம் தெரியப்படுத்தப்பட்டது. இந்த விடயத்தில் நாம் ஒன்றாக ஒரு நாடாக முகம் கொடுத்தால், சர்வதேச நாணய நிதியம், மற்றும் கடன் வழங்குனநர்களுடன் சக்தி மிக்கதொரு கலந்துரையாடலை மேற்கொள்ள முடியும்.

ஊழல், மோடிகளுக்கு எதிரான செயற்பாடுகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாரங்களை இரத்து செய்வது தொடர்பான நடவடிக்கைகளுக்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராகவே உள்ளோம்” என கூறியுள்ளார்.